துமிந்த மீது அனுதாபம் உள்ளது: ஹிருனிகா! - sonakar.com

Post Top Ad

Saturday 13 October 2018

துமிந்த மீது அனுதாபம் உள்ளது: ஹிருனிகா!


தனது தந்தையைக் கொன்ற வழக்கில் துமிந்த சில்வாவின் மரண தண்டனை உச்ச நீதிமன்றினால் மீளிறுதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் திருப்தி வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர, துமிந்தவின் நிலையை நினைத்து அனுதாபப் படுவதாக தெரிவித்துள்ளார்.



பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா அதனை எதிர்த்து மேன்முறையீடு செய்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தண்டனைணை மீளவும் உறுதி செய்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஹிருனிகா இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment