வெள்ள அனர்த்தத்தினால் 700 குடும்பங்கள் பாதிப்பு: DMC - sonakar.com

Post Top Ad

Monday 1 October 2018

வெள்ள அனர்த்தத்தினால் 700 குடும்பங்கள் பாதிப்பு: DMC


கடந்த சில தினங்கள் பெய்த மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் சுமார் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அனர்த்த முகாமைத்துவ மையம்.

அக்குறணை, காலி, பெலிகஹ, மொரகொட, தங்கெதர போன்ற பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருந்த அதேவேளை மழை வீழ்ச்சி மேலும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment