கோத்தாவின் வழக்கு: டிச. 4 முதல் தினசரி விசாரணை! - sonakar.com

Post Top Ad

Tuesday 9 October 2018

கோத்தாவின் வழக்கு: டிச. 4 முதல் தினசரி விசாரணை!


டி.ஏ ராஜபக்ச நினைவகத்தை புனர் நிர்மாணம் செய்ததன் பின்னணியில் இடம்பெற்ற 49 மில்லியன் ரூபா ஊழல் தொடர்பிலான வழக்கினை டிசம்பர் 4ம் திகதி முதல் தினசரி விசாரணைக்குட்படுத்த தீர்மானித்துள்ளது அண்மையில் அமையப் பெற்ற விசேட உயர் நீதிமன்றம்.



மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களை துரிதமாக விசாரிக்கவென அமையப்பெற்றுள்ள இவ்விசேட நீதிமன்றம் இயங்கி வரும் நிலையில் ஏலவே ஜோன்ஸ்டன் பெர்னான்டாவின் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், தான் கைதாவதைத் தவிர்த்து வந்த கோத்தபாய ராஜபக்சவின் வழக்கும் இங்கு பதியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment