இலங்கைக்கு சவுதியிடமிருந்து மேலும் 300 மில்லியன் டொலர்! - sonakar.com

Post Top Ad

Sunday 2 September 2018

இலங்கைக்கு சவுதியிடமிருந்து மேலும் 300 மில்லியன் டொலர்!


நாட்டின் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவுமுகமாக சவுதி அரேபியா மேலும் 300 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார் இலங்கைக்கான சவுதி அரேபிய தூதர் அப்துல் நசார் அல் ஹர்தி.



நீர்ப்பாசனம், விவசாயம், கல்வி மற்றும் சுகாதார துறைகளில் இந்நிதி பயன்படுத்தப்படும் என எதிர்பார்ர்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏலவே இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சவுதி அரேபியா உதவி வருகின்றமையும் பிரத்யேகமாக முஸ்லிம் அரசியல்வாதிகளும் சவுதி தொடர்புகளைப் பயன்படுத்தி நலன்களை அடைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment