மினுவங்கொடயில் துப்பாக்கிச் சூடு: 62 வயது நபர் பலி! - sonakar.com

Post Top Ad

Sunday 5 August 2018

மினுவங்கொடயில் துப்பாக்கிச் சூடு: 62 வயது நபர் பலி!


துப்பாக்கிச் சூட்டுக் கலாச்சாரம் வேகமாக பரவி வரும் நிலையில் இன்று மினுவங்கொடயில் இனந்தெரியாத நபரின் துப்பாக்கிப் பிரயோகத்துக்கு 62 வயது நபர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் கொழும்பு, மோதர பகுதியிலும் பாதாள உலக பேர்வழியொருவரின் வயதான தந்தை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment