இனியும் முடியாது: ஜனாதிபதிக்கு UNPயிலிருந்தும் கடிதம்! - sonakar.com

Post Top Ad

Sunday 8 April 2018

இனியும் முடியாது: ஜனாதிபதிக்கு UNPயிலிருந்தும் கடிதம்!


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த ஸ்ரீலசுக உறுப்பினர்களுடன் இனியும் இணைந்து பணியாற்ற முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



மைத்ரியின் பலவீனமான நிலையைப் பயன்படுத்தும் ரணில் எதிர்ப்பாளர்கள் தாமும் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதுடன் தனியாக மே தினம் கொண்டாடுவதற்கும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சு.கவின் இரு பிரிவினரும் தாம் கட்சித் தலைமையுடன் ஆலோசித்தே பிரேரணைக்கு ஆதரவளித்ததாகவும் வாக்களிப்பைத் தவிர்த்துக் கொண்டதாகவும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment