தனித்து ஆட்சியமைக்க UNPக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: SB - sonakar.com

Post Top Ad

Thursday 12 April 2018

தனித்து ஆட்சியமைக்க UNPக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: SB


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றி நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டதன் மூலம் நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க.



ஸ்ரீலசுகட்சி சார்பில் அமைச்சுப் பதவிகள் வகித்த அறுவர் உட்பட 16 பேர் அரசிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ள நிலையில் இன்று பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சு.க குரூப் 16 தம்மோடு சேரும் என மஹிந்த தெரிவித்து வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 'வாய்ப்பளிப்பது' குறித்து எஸ்.பி. தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment