தேவைப்பட்டால் இராஜினாமா செய்யத் தயார்: யாப்பா - sonakar.com

Post Top Ad

Thursday 5 April 2018

தேவைப்பட்டால் இராஜினாமா செய்யத் தயார்: யாப்பா


நம்பிக்கையில்லா பிரேரணையின் போது அதனை ஆதரித்து வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமது அமைச்சுப் பதவிகளைத் துறக்கத் தயார் என தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா.


மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் ஸ்ரீலசுக மேற்கொண்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே தாம் தீர்மானித்ததாகவும் தேவைப்படின் இராஜினாமா செய்யத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதி சொன்னாலேயன்றி தாம் பதவி விலகப் போவதில்லையென டிலான் பெரேரா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment