காஸா எல்லையில் மீண்டும் பதற்றம்; மூவர் உயிரிழப்பு - sonakar.com

Post Top Ad

Friday 6 April 2018

காஸா எல்லையில் மீண்டும் பதற்றம்; மூவர் உயிரிழப்பு


காஸா எல்லையில் இன்று மீண்டும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் தாக்குதலில் இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 250 பேர் வரை காயமடைந்துள்ளனர்.



கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தின் போது 17 பேர் கொல்லப்பட்டிருந்ததோடு 1600 பேர் வரை காயமடைந்திருந்தனர்.

ஆக்கிரமிப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டினாலேயே அதிகமானோர் காயமுற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment