கண்டி வன்முறை: பள்ளிகளை சேதப்படுத்திய இரு கோப்ரல்கள் கைது! - sonakar.com

Post Top Ad

Monday 9 April 2018

கண்டி வன்முறை: பள்ளிகளை சேதப்படுத்திய இரு கோப்ரல்கள் கைது!


கண்டி வன்முறையின் போது பள்ளிவாசல்களை சேதப்படுத்திய இரு இராணுவ கோப்ரல்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


பல இடங்களில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக பாதுகாப்பு படையினரே முஸ்லிம்களுக்கு எதிரான இனவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு கடையுடைப்பு, பள்ளிகளை சேதப்படுத்தல் மற்றும் இமாம்களை தாக்கிய சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், தற்போது இரு இராணுவ கோப்ரல்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment