அடுத்தது சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: தினேஷ் - sonakar.com

Post Top Ad

Sunday 8 April 2018

அடுத்தது சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: தினேஷ்


ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக விடாப்பிடியாக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்து அதில் தோல்வியுற்றுள்ள நிலையில் அடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு எதிராக பிரேரணையொன்றைக் கொண்டுவரப் போவதாக தெரிவிக்கிறார் தினேஷ் குணவர்தன.


இலங்கை நாடாளுமன்றம் 'கேலிக் கூத்தான' இடமாக மாறுவதிலிருந்து காப்பாற்றுவதற்கே இந்நடவடிக்கையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் செப்டம்பருடம் தற்போதைய நாடாளுமன்றம் மூன்று வருட பதவிக் காலத்தை பூர்த்தி செய்யவுள்ள நிலையில் தினேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment