திருமலை: இந்துக் கல்லூரி முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம் - sonakar.com

Post Top Ad

Thursday 26 April 2018

திருமலை: இந்துக் கல்லூரி முஸ்லிம் ஆசிரியைகளுக்கு தற்காலிக இடமாற்றம்



அபாயா சர்ச்சைக்குள்ளான திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முஸ்லிம் ஆசிரியைகள் ஐவருக்கும் தற்காலிகமாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.



தமது இந்து மத கலாச்சாரத்தைப் பேணும் பாடசாலையில் அபாயா அணிந்த ஆசிரியர்களை அனுமதிக்க முடியாது என குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவியர் மற்றும் பழைய மாணவியரும் போர்க்கொடி தூக்கியதன் பின்னணியில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலதிக சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment