நீர்கொழும்பு: வீதிகளில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Monday 30 April 2018

நீர்கொழும்பு: வீதிகளில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை


நீர்கொழும்பில் நாளுக்கொரு வேலைத்திட்டம் எனும் மேயர் லன்சாவின் செயற்திட்டத்தின் பின்னணியில் அங்கு வீதிகளில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக அதிகாலை திடீர் பரிசோதனை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதிகாலை 5 மணியளவில் களப்பரிசோதனை மேற்கொண்டதன் மூலம் இவ்வாறு வீதிகளில் குப்பை கொட்டுபவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

மாநகர சுகாதார பிரிவினர் குறித்த நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளனர்.

-மு. முஜீப்

No comments:

Post a Comment