மலிக் இல்லாவிட்டால் ஐ.தே.க உருப்படும்: அசாத் சாலி! - sonakar.com

Post Top Ad

Thursday 22 March 2018

மலிக் இல்லாவிட்டால் ஐ.தே.க உருப்படும்: அசாத் சாலி!


2015 மக்கள் எழுச்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது மக்களால் நிராகரிக்கப்படும் நிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சென்றதற்கு மலிக் சமரவிக்ரமவே காரணம் என தெரிவித்துள்ளார் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி.

ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்ச்சியிலிருந்து கட்டியெழுப்ப அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற இளையோர் மற்றும் அனுபவமிக்க சிரேஷ்ட உறுப்பினர்களையும் மீளவும் இணைத்துக் கொள்வதே சிறந்த வழியென ரவி கருணாநாயக்க தெரிவித்திருக்கும் கருத்தை ஆமோதித்துள்ள அவர், தனிப்பெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மீளக் கட்டியமைக்க ரவியின் ஆலோசனை சிற்நதது என தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி நிர்வாகத்தில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment