விரைவில் 'செயற்கை மழை': அமைச்சு நம்பிக்கை - sonakar.com

Post Top Ad

Wednesday 28 March 2018

விரைவில் 'செயற்கை மழை': அமைச்சு நம்பிக்கை



தாய்லாந்து நிறுவனம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ள நிலையில் விரைவில் நாட்டின் சில பாகங்களில் செயற்கை மழை உருவாக்கப்படும் என தகவல் வெளியிட்டுள்ளது மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சு.

அமைச்சரவை அங்கீகராமும் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் நாட்டில் ஏற்படும் வரட்சியை சமாளிக்க முதன் முறையாக இத்தொழிநுட்பம் பயன்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத்தொழிநுட்பத்தில் நிபுணத்துவம் உள்ள தாய்லாந்து நிறுவனம் கடந்த மாதம் இதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment