ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; 2 மணிக்கு கையளிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 21 March 2018

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; 2 மணிக்கு கையளிப்பு


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று பி.ப 2 மணியளவில் கையளிக்கப்படும் என தெரிவிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.

உள்ளூராட்சித் தேர்தல் தோல்வியையடுத்து கட்சி மட்டத்திலும் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வரும் ரணில் விக்கிரமசிங்க, தமது கட்சியில் நிர்வாக மாற்றங்களை உருவாக்கத் திட்டமிட்டு வருகின்றார்.


எனினும், கூட்டு எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சு.க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் பிரமுகர்களும் ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment